பெண்களுக்கான வீட்டு கடன் பற்றி நீங்கள் அறிய வேண்டியவை
•
வீடு வாங்குவது நம்மில் பலருக்கு ஒரு அரிதான மற்றும் ஆற்றல் தரும் முடிவாகும். இதற்காக நாம் நமது சேமிப்புகளை வாரியிறைக்கிறோம், கடன் பெறுகிறோம் மற்றும் மாதாமாதம் தவணைகளை செலுத்தும் நீண்ட கால பொறுப்பை ஏற்றுக்கொள்கிறோம். ஒரு வட்டி செலுத்தும் வேகத்தை அமைத்துக்கொண்டும் நிதி நிறுவனங்களின் நெருக்கடிக்கு தயார்படுத்திக்கொண்டாலும் நியாயமாக நிதியுதவி பெற்று பணத்தையும் சேமிக்கும் ஒரு எளிய வழி கண் முன்னே இருந்தாலும் நாம் அதை புறக்கணிக்கிறோம். வீட்டு கடன் பெறுபவரின் ஒரு முக்கிய கவலை யாதெனில் தனது கனவு இல்லத்தை வாங்க உதவும் ஒரு அதிக முன்பண தொகையை பெறுவதும் இந்த கடன் செயல்முறை எளிதாகவும் சுலபமாகவும் அமைய வேண்டுமே என்பதுதான். அதிர்ஷ்டவசமாக இந்த கவலைகளை குறைக்கவும் மற்றும் பல்வேறு அம்சங்களின் மூலம் அதிக நன்மையடையவும் ஒரு அற்புத வழி உள்ளது. அதுவே பெண்களுக்கான வீட்டு கடன்.
இக்காலத்தில் வீடு வாங்க முடிவெடுக்கும் உபாயத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாக பெண்கள் மாறியுள்ளனர். தற்போது பெண்கள் அதிகளவில் முழுநேர பணி/வர்த்தகம்/தொழில்பாதையில் ஈடுபடுகின்றனர். எனவே தங்கள் வாழ்க்கை துணைவரையோ தந்தையையோ இனியும் சார்ந்திருப்பதில்லை. எனவே அவர்களில் பலர் தங்கள் கணவரின் வீட்டு கடனுக்கு பெருமளவில் நிதியாதரவை வழங்க இயலுகிறது. வீட்டு கடனுடன் முனைப்பு செலுத்தக்கூடிய பல அம்சங்கள் இணைந்துள்ளன மற்றும் இவை பெண்களுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது. இவற்றில் அடிப்படியான சிலவற்றை நாம் இங்கு ஆராய்ந்து பார்த்து ஏன் ஒரு பெண் வீட்டு கடன் பெறுபவர்களில் ஒருவராக இணையவேண்டும் என்று அறிந்துக்கொள்ளலாம்.
பெண்களுக்கான வீட்டு கடன் வழங்கும் நன்மைகள்:
- அதிகளவு கடன் தகுதி: வருமானம் கொண்ட பெண்கள் தங்கள் வாழ்க்கைத்துணைவருடன் இணைந்து விண்ணப்பிக்கலாம். இது அவர்களின் வீட்டு கடன் தகுதியை நீட்டிப்பது போல நன்மையை வழங்கி மேலும் ஒரு வீடு வாங்கும்போது குறிப்பிடத்தக்க நெகிழ்வுதன்மையை பெற்றுத்தருகிறது.
- வரி விலக்கு நன்மைகள்: தம்பதியினர் இருவருக்கும் தனித்தனியாக வீட்டு கடன் அடைப்பதின் மூலம் கிடைக்கப்பெறும் வரி நன்மைகள் இருவரும் சேர்ந்தே அடைப்பதிலும் கிடைக்கின்றன. குறிப்பாக ரூ.1.5 லட்சம் வரை தனித்தனியாக அடைப்பதற்கும் (பிரிவு 80C) சேர்ந்து அடிப்பதில் ரூ.2 லட்சம் வரையிலும் (பிரிவு 24) கிடைக்கிறது. எனவே ஒரு குழுவாக அவர்கள் மொத்தம் ரூ.3 லட்சம் வரையிலும் (பிரிவு 80C) ரூ.4 லட்சம் வரையிலும் (பிரிவு 24) வரி விலக்கு நன்மையை EMI செலுத்தவதன் மூலம் பெறலாம். இது ஒன்றே சேமிப்பின் மிக முக்கிய அங்கமாக விளங்கும்.
- குறைந்த முத்திரைதாள் கட்டணம்: ஒரு பெண்மணி என்ற வகையில் சொத்து வாங்குவது முத்திரை தாள் கட்டண விகிதத்தில் மிகப்பெரிய நன்மைகளை பெற்றுத்தருகிறது. பல மாநில அரசுகள் பெண்கள் அதிகாரத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதால் முத்திரை தாள் கட்டணத்தில் ஆண்கள் சொத்து வாங்குவதற்கான கட்டணத்தில் 1-2% தள்ளுபடி வழங்குகிறது. பணியாற்றும் பெண்கள் ரூ.30 லட்சம் பெறுமான சொத்துக்கு உரிமையாளர் என்றால் கூடுதலாக ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை நன்மையடையலாம்.
- வீட்டு கடன் ஒப்புதல் பெற கூடுதல் சாத்தியக்கூறுகள்: பல்வேறு நிதிநிறுவனங்கள் மூலம் காணப்படும் உதாரணம் மூலம் நாம் அறிவது என்னவென்றால் பெண்கள் ஆண்களை விட அதிகளவில் தவறாது சேமிப்பவர்கள். குறுகிய குடும்பங்கள் மற்றும் நிதிசார் நிறுவனங்களில் உள்ள பெண்கள் மிகவும் பொறுப்பு மிக்கவர்கள் மற்றும் கலெக்ஷனை பொறுத்தவரை செலுத்த தவறுதல் விகிதங்கள் என்பது குறைவாக காணப்படுகின்றன. இவையனைத்தும் பெண்கள் வீட்டு கடனுக்கான ஒப்புதலை விரைவாக பெற உதவுகின்றன.
- பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிஎம்ஏஒய்): PMAY இன் கீழ் EWS, LIG அல்லது MIG பிரிவுகளின் கீழ் வருபவர்கள் அரசு மானியமாக ரூ.2.67 லட்சம் வரை தங்கள் முதல் வீட்டை வாங்க கடன் பெறும்போது கடன் அசல் தொகையிலிருந்து தள்ளுபடி நன்மையை பெறுகின்றனர். இதில் சிறப்பான அம்சம் என்னவென்றால் பெண் சொத்தின் முழு உரிமையாளராகவோ அல்லது இணை உரிமையாளராகவோ இருத்தல் வேண்டும் என்று PMAY கட்டாயமாக்குகிறது.
பெண்களுக்கான வீட்டு கடன் பெறும் தகுதி:
எந்தவொரு நிதி நிறுவனமும் கடன் வழங்க ஒப்புக்கொண்டால் அதற்கு ஈடான அடமானத்தை கோரும். அதை கடனுக்கு விண்ணப்பிப்பவர்பூர்த்தி செய்ய வேண்டும். ஹோம்ஃபர்ஸ்டை பொறுத்தவரை பெண்களுக்கான தகுதி நிபந்தனைகள் குறைவாகவும் எளிதாகவும் உள்ளன.
* அவர் ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
* அவர் வயது 20 மற்றும் 60 க்குள் இருக்க வேண்டும்.
* அவர் இரண்டு வருடங்களுக்கு வேலையில் இருக்க வேண்டும்.
* அவருடைய கிரெடிட் ஸ்கோர் 650 அல்லது அதற்கு அதிகம் இருக்கவேண்டும்.
* மாத சம்பளம் ரூ.15,000 க்கு அதிகமிருக்க வேண்டும்.
மேற்கூறிய வழிகாட்டல்களை தவிர வீட்டு கடன் தகுதியை வீட்டு கடன் தகுதி கால்குலேட்டர் மூலமும் தீர்மானித்து கொள்ளலாம்.
மேற்கூறிய பெண்களுக்கான வீட்டு கடன் நன்மைகள் கடன் பெறுபவருக்கு மிக முக்கிய வழிகளில் கடன் பெறும் ஒப்புதலையும் கடன் அடைப்பதையும் சுலபமாக்கி அதிகளவில் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க உதவுகிறது. வாழ்க்கை துணைவரை ஒரு இணை உரிமையாளராகவோ இணை கடன்பெறுபவராகவோ சேர்ப்பது EMI யின் சுமையை குறைப்பது மட்டுமல்லாமல் பெண்கள் அதிகாரத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் அமைகிறது.
இவ்வாறாக வீடு வாங்க விரும்பும் பெண்மணிகள் பெண்களுக்கான வீட்டு கடனை பெற்று உங்கள் கனவை நனவாக்கும் ஒரு அடியெடுத்து வையுங்கள்!
இந்த கட்டுரையை வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளுங்கள்